Translate

Thursday, 6 November 2014

படிப்பு நம்மை சீர்திருத்தி விட்டதா???

படித்தவன் ஒரு கையெழுத்து வாங்க 100 குடுத்து வாங்கிட்றான்
படிக்காதவன் காசு கொடுக்காமல் பல மணி நேரம் காத்திருந்து வாங்குகிறான்
படித்தவன் சட்டத்தின் ஓட்டையை தெரிந்து கொண்டு தவறு செய்கிறான்
படிக்காதவன் தவறு செய்யவே யோசிக்கிறான்
படித்தவன் சிறைக்கு கூட சிரித்து டாட்டா காட்டி கொண்டே செல்கிறான் 
படிக்காதவன் காவல் நிலையம் செல்வதையே கேவலமாக எண்ணுகிறான்
படித்தவன்(ள்) அங்கங்கள் தெரிய கட்டிக்கொள்கிறார்கள்
படிக்காதவர்கள் ஆடையில் கட்டுப்பாடாகவே இருக்கிறார்கள்
பக்கத்தில் வீட்டில் எதும் உதவி என்றால் படிக்காதவன் ஓடி வருகிறான் படித்தவன் வேணிக்கை பார்க்கிறான்
உணவளிக்கும் பாட்டாளி விவசாயிக்கு படித்தவர்கள் கொடுத்த பட்டம் காட்டுமிராண்டி, பட்டிக்காட்டான், மாடு மேய்ப்பவன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அனைவரும் படித்தவர்களே, ஆட்சிக்கட்டிலில் இருந்து திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் புரியும் அனைவரும் படித்தவர்களே
படிப்பு மனிதனை சீர்திருத்தி விட்டதா இல்லை சீர்குலைத்து விட்டதா
இங்கு படிப்பில் மாற்றம் தேவையில்லை ஆள்வதற்கு ஒரு ஹிட்லர் தேவை

பேனா முனையில் சீர்திருத்தம் அடைய நம்மக்கள் தயாரில்லை 
உயிர் பயம் காட்டும் துப்பாக்கி முனையில் தான் சீர்திருத்தம் அடைவார்கள்

No comments:

Post a Comment